பச்சையப்பன் கல்லூரியில் ரத்ததான முகாம்
காஞ்சிபுரம், ஜூலை 11:
காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் தன்னார்வ ரத்ததான முகாம் வெள்ளிக்கிழமை கல்லூரி முதல்வர் ப.முருககூத்தன் தலைமையில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம்,அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை, டெம்பிள் சிட்டி சுழற் சங்கம் ஆகியன இணைந்து கல்லூரி வளாகத்தில் தன்னார்வ ரத்ததான முகாமை நடத்தினார்கள்.
கல்லூரியின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் ந.பழனிராஜ் உட்பட பலரும் ரத்ததானத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார்கள்.நிறைவாக என்.வித்தக வேந்தன் நன்றி கூறினார்.முகாமில் கல்லூரி பேராசிரியர்கள்,மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments