காஞ்சிபுரத்தில் தீயணைப்புத்துறையினருக்கு பேரிடர் கால உபகரணங்களை ஆட்சியர் வழங்கினார்
காஞ்சிபுரம் :

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் பேரிடர் காலங்களில் உடனடி மீட்பு பணிகளில் ஈடுபடுவதில் முக்கியப் பங்காற்றி வருகின்றனர்.
எனவே காஞ்புரம் மாவட்ட தீயணைப்புத்துறையினருக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் ஆப்தமித்ரா திட்டத்தின் கீழ் பேரிடர் கால பாதுகாப்பு உபகரணங்களை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.
நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) சத்யா, மாவட்ட தீயணைப்பு அலுவலர் அப்துல்பாரி உட்பட தீயணைப்பு அலுவலர்கள், அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments