Breaking News

காஞ்சிபுரம் வருகை புரிந்த சங்கர மட பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு பூரண கும்ப மரியாதை

காஞ்சிபுரம் வருகை புரிந்த சங்கர மட பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு பூரண கும்ப  மரியாதையுடன் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.  


காஞ்சிபுரம் சங்கர மடப்பிடாதிபதி திருப்பதியில் முகமிட்டுள்ளார் இதனைத் தொடர்ந்து விழுப்புரம் ஒரு நாள் முகாமிற்காக புறப்பட்ட சங்கராச்சாரியார் வழியில் காஞ்சிபுரம்  ஊருக்கே மணிமண்டபத்திற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பலித்தார் இதில் இவருக்கு பூரண கும்பம் மரியாதை உடன் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது 

இதனைத் தொடர்ந்து மணிமண்டபத்தில் அமைந்துள்ள திருக்குளத்தில் உள்ள மீன்களுக்கு பொறி அளித்தார் தொடர்ந்து மணி மண்டபத்தில் வருகை புரிந்து அனைத்து பக்தர்களுக்கும் ஆசி வழங்கிய பிரசாதங்கள் வழங்கினார் 

இதில் காமாட்சி அம்மன் ஆலயம் சார்பில் ஸ்ரீ காரியம் சுந்தரேஸ் ஐயர் மணியக்காரர் சூரி ஆகியோர் காமாட்சி அம்பாள் பிரசாதம் சுவாமிகளுக்கு சமர்ப்பித்தனர் 

இதில் மணிமண்டபம் நிர்வாகி சுப்பிரமணியன். சங்கரமட வரவேற்பு குழுவை சேர்ந்த ராமஸ்கெப் சுப்ரமணியன். மோதிலால்.ராஜேஷ் ஜெயின் . உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆச்சார்யா சுவாமிகளின் அனுகிரகம் பெற்று சென்றனர்.

No comments

Thank you for your comments