Breaking News

காஞ்சிபுரத்தில் TNTJ சார்பில் இளைஞர்களுக்கான நல்லொழுக்க சொற்பொழிவு நிகழ்ச்சி

 காஞ்சிபுரம்:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ), காஞ்சிபுரம் மாவட்ட கிளை சார்பில் இளைஞர்களுக்கான நல்லொழுக்க சொற்பொழிவு நிகழ்ச்சி ஒலிமுகமதுப்பேட்டை தவ்ஹீத் பள்ளிவாசலில் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சி, "அழகிய முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள்" என்ற 4 மாத திட்டத்துக்குப் பின்னர் நடைபெற்றது.

தலைமை மற்றும் பேச்சாளர்கள்:

நிகழ்ச்சிக்கு கிளைத் தலைவர் சாகுல் ஹமீது  தலைமையிலானது. மாவட்ட துணைத் தலைவர் அன்சாரி,  மாவட்ட துணைச் செயலாளர் ஆசிஃப்,  TNTJ தலைமை பேச்சாளர் ஹூசைன் ஆகியோர் முக்கிய விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்கள்.

உரையிலுள்ள முக்கிய அம்சங்கள்:

  • மது, புகை, வட்டி, வரதட்சனை ஆகிய சமூக தீமைகளின் பாவமும், விளைவுகளும் பற்றி விழிப்புணர்வூட்டப்பட்டது.
  • இஸ்லாமிய ஒழுக்கமும், கல்வியின் முக்கியத்துவமும் விளக்கப்பட்டது.

பங்கேற்பு :

இந்நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.  இளைஞர்களிடையே நல்லெண்ணம் மற்றும் சமூக மாற்றத்துக்கான நம்பிக்கையை TNTJ ஏற்படுத்தியதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.

நிறுவனத்தினரின் பங்களிப்பு:

காஞ்சிபுரம் கிளைச் செயலாளர் சாகுல் ஹமீதுபொருளாளர் பாசில்,  துணைச் செயலாளர் அப்துல்லாஹ், மற்றும் கிளை நிர்வாகிகள் பங்கேற்று திட்டமிட்டு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தியனர்.

No comments

Thank you for your comments