திருக்காலிமேடு அலபாத் ஏரி தூர்வாரும் பணியை கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேரில் ஆய்வு
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட திருக்காலிமேடு அலபாத் ஏரியை கோமாட்சு நிறுவனம், எக்ஸ்னோரா மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தூர் வாரும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பணியை விரைவில் முடிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
தொடர்ந்து திருப்பெரும்புதூர் பிற்படுத்தப்பட்டோர் அரசு மாணவர் விடுதியை பார்வையிட்டு, விடுதியிலுள்ள மாணவர்களிடம் கலந்துரையாடி, குறைகளை கேட்டறிந்து, விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு மேற்கொண்டார்கள்.
இவ் ஆய்வின்போது காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையாளர் (பொ) திருமதி.சசிகலா, திருப்பெரும்புதூர் சார் ஆட்சியர் திருமதி.ந.மிருணாளினி, இ.ஆ.ப., மாநகராட்சி பொறியாளர் திரு.கணேசன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
No comments
Thank you for your comments