Breaking News

தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் – ஆடவர் விளையாட்டுப் போட்டிகள் துவக்க விழா காஞ்சிபுரத்தில் சிறப்பாக நடைபெற்றது

காஞ்சிபுரம் ஒலிமுகமதுப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் அண்ணா மாளிகையில் தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் சென்னை மண்டலங்களுக்கு இடையிலான ஆடவர் விளையாட்டுப் போட்டிகள் 2025-2026 துவக்க விழா நடைபெற்றது. 


தில் விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைக்க காஞ்சிபுரம் மண்டல தலைமை பொறியாளர் பகிர்மானம் பொறுப்பு ராமச்சந்திரன், திருவள்ளூர் மேற்பார்வை பொறியாளர் சேகர், செங்கல்பட்டு மேற்பார்வை பொறியாளர் அன்புச்செல்வன் வருகை புரிந்தனர். 

விளையாட்டுப் போட்டியினை துவக்கி வைக்க சிறப்பு அழைப்பாளராக  மின் பகிர்மான கழக மாநில தொமுச விளையாட்டுப் பிரிவு பொதுச் செயலாளர் பா.மணிமாறன் விளையாட்டுப் போட்டியினை குத்து விளக்கு ஏற்றி சமாதான புறாவை பறக்க விட்டு துவக்கி வைத்தார். 

மேலும் இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றுகையில், 

விளையாட்டு போட்டியில் முதலிடம் பெற்று பதக்கம் வாங்கியவர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரிய பகிர்மானத்தில் உயர் அதிகாரி பதவிகள் கிடைக்கும் என்றும் விளையாட்டில் முக்கியத்துவம் அளித்து அனைத்து விளையாட்டுகளிலும் முன்னுரிமை பெற்று பதக்கங்களை பெற வேண்டும் என விளையாட்டு வீரர்களை வாழ்த்தி மாவட்ட அளவிலான இந்த மூன்று நாள் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று கோயம்புத்தூரில் நடைபெறும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளை பங்கேற்று முதலிடத்தை சென்னை மண்டல விளையாட்டு அணி பெற வேண்டும் என வாழ்த்துரை வழங்கினார். 

மேலும் இந்நிகழ்ச்சியில் விளையாட்டு போட்டியில் பங்கு பெற்று மாவட்ட மாநில அளவில் பதக்கங்களை பெற்ற மூத்த ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்களுக்கு பொன்னாடை போர்த்தி கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் பொது கண்ணன், சென்னை மண்டல விளையாட்டு குழு பொறியாளர் பாபுராஜ், காஞ்சிபுரம் வட்ட விளையாட்டு பொறுப்பாளர் ஜானகிராமன், நன்றியுரை காஞ்சிபுரம் வட்ட விளையாட்டு குழு உறுப்பினர் குடியரசு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

.காஞ்சிபுரம் ஒலிமுகமதுப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் அண்ணா மாளிகையில் தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் சென்னை மண்டலங்களுக்கு இடையிலான

ஆடவர் விளையாட்டுப் போட்டிகள் 2025-2026 துவக்க விழா நடைபெற்றது. இதில் விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைக்க காஞ்சிபுரம் மண்டல தலைமை பொறியாளர் பகிர்மானம் பொறுப்பு ராமச்சந்திரன், திருவள்ளூர் மேற்பார்வை பொறியாளர் சேகர், செங்கல்பட்டு மேற்பார்வை பொறியாளர் அன்புச்செல்வன் வருகை புரிந்தனர். விளையாட்டுப் போட்டியினை துவக்கி வைக்க சிறப்பு அழைப்பாளராக  மின் பகிர்மான கழக மாநில தொமுச விளையாட்டுப் பிரிவு பொதுச் செயலாளர் பா.மணிமாறன் விளையாட்டுப் போட்டியினை குத்து விளக்கு ஏற்றி சமாதான புறாவை பறக்க விட்டு துவக்கி வைத்தார். 

மேலும் இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றுகையில் விளையாட்டு போட்டியில் முதலிடம் பெற்று பதக்கம் வாங்கியவர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரிய பகிர்மானத்தில் உயர் அதிகாரி பதவிகள் கிடைக்கும் என்றும் விளையாட்டில் முக்கியத்துவம் அளித்து அனைத்து விளையாட்டுகளிலும் முன்னுரிமை பெற்று பதக்கங்களை பெற வேண்டும் என விளையாட்டு வீரர்களை வாழ்த்தி மாவட்ட அளவிலான இந்த மூன்று நாள் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று கோயம்புத்தூரில் நடைபெறும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளை பங்கேற்று முதலிடத்தை சென்னை மண்டல விளையாட்டு அணி பெற வேண்டும் என வாழ்த்துரை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் விளையாட்டு போட்டியில் பங்கு பெற்று மாவட்ட மாநில அளவில் பதக்கங்களை பெற்ற மூத்த ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்களுக்கு பொன்னாடை போர்த்தி கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் பொது கண்ணன், சென்னை மண்டல விளையாட்டு குழு பொறியாளர் பாபுராஜ், காஞ்சிபுரம் வட்ட விளையாட்டு பொறுப்பாளர் ஜானகிராமன், நன்றியுரை காஞ்சிபுரம் வட்ட விளையாட்டு குழு உறுப்பினர் குடியரசு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments