Breaking News

உலக இரத்தக்கொடையாளர் தினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு விருது - 1411 யூனிட்கள் குருதி கொடை!

காஞ்சிபுரம், ஜூன் 14:


தமிழகத்தில் கடந்த 22 ஆண்டுகளாக குருதி தான சேவையில் முன்னணி அமைப்பாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ), 14.06.2025 அன்று உலக இரத்ததான தின நிகழ்ச்சியில் அரசு விருதைப் பெற்றது.


தமிழகத்தில் கடந்த 22 ஆண்டுகளாக இரத்ததான முகாம்கள், விபத்து, பிரசவம் மற்றும் அவசர காலங்களில் குருதிக்கொடையளித்து உயிர் காக்கும் உன்னத சேவையில் முதலிடம் வகித்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ),  14/06/2025 அன்று தமிழக அரசு சார்பாக காஞ்சி அறிஞர் அண்ணா அரசு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் நடைப்பெற்ற உலக இரத்தக்கொடையாளர்கள் தின நிகழ்ச்சியில் TNTJ காஞ்சிபுரம்  மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் கிளை சார்பாக இரத்ததான சேவையை பாராட்டி 9 நபர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. 

மேலும் கடந்த ஓராண்டில் மட்டும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் கீழ் இயங்கும் கிளைகளின் முலமாக 14 இரத்ததான முகாம்கள், அவசர இரத்ததானமாக 1411 யூனிட்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் மூலமாக அனைத்து சமுதாய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது..

இதில் TNTJ காஞ்சி மாவட்ட மருத்துவரணி செயலாளர் சர்புதீன் சான்றிதழ் பெற்றுக்கொண்டார். மற்றும் காஞ்சிபுரம் கிளை மருத்தவரணி செயலாளர் அன்சாரி, உசேன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

No comments

Thank you for your comments