Breaking News

இரத்ததானத்தின் அவசியத்தை எடுத்துரைக்கும் விழிப்புணர்வு பேரணி - 500 மாணவர்கள் பங்கேற்பு

ஸ்ரீபெரும்புதூர், ஜூன் 14:


இரத்ததானம் செய்வதன் அவசியம் மற்றும் அதன் மக்களுக்கு பயக்கும் பலன்கள் குறித்து பொதுமக்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், அன்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ராஜலட்சுமி ஹெல்த் சிட்டி, மற்றும் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி ஆகிய நிறுவனங்களின் மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள், நர்சிங் கல்லூரி மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைந்து விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்டனர்.


இந்த பேரணியை மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் திருமதி K. வனிதா அவர்கள் தொடங்கி வைத்தார். 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

பேரணி, ஸ்ரீபெரும்புதூர் தேர் அடி பகுதியில் தொடங்கி, பஜார் வீதி வழியாக முன்னாள் பிரதமர் உயர்திரு. ராஜீவ் காந்தி நினைவகம் வரை நடைபயணமாக நடைபெற்றது.

பேரணியில் மாணவர்கள் பதாகைகள், விளக்கப்பொருள்கள், அறிவுப்பலகைகள் மற்றும் கூச்சழுத்தங்கள் மூலம் பொதுமக்களிடையே இரத்ததானத்தின் சமூகப் பெருமைகளை எடுத்துரைத்தனர்.

இந்த விழிப்புணர்வு நடவடிக்கை, மாணவர்களின் சமூகப் பொறுப்புணர்வையும், இரத்ததானம் போன்ற உயிர் காக்கும் சேவைகளின் மீது அவர்கள் கொண்டுள்ள அக்கறையையும் வெளிப்படுத்தியது.

No comments

Thank you for your comments