Breaking News

புதிய விரிவான மினி பஸ் திட்டத்தினை அமைச்சர் ஆர்.காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம், ஜுன் 17 :

காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் புதிய விரிவான மினி பஸ் திட்டத்தினை  அமைச்சர்  கொடியசைத்து  தொடங்கி வைத்தார்.


காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் புதிய விரிவான மினி பஸ் திட்டத்தினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கொடியசைத்து  தொடங்கி வைத்து, வாகன உரிமையாளர்களுக்கு வழித்தடங்களுக்கான உரிமம் வழங்கினார்.

காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் மூலம் புதிய வழித்தடங்கள் (Fresh Route) – 03, புலம் பெயர்ந்த வழித்தடங்கள் (Migration Route) 17, திருப்பெரும்புதூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் மூலம் புதிய வழித்தடங்கள் (Fresh Route) – 01-ம்,  புலம் பெயர்ந்த வழித்தடங்கள் (Migration Route)- 08 எனவும், இயக்கப்படும் மொத்த புதிய வழித்தடங்கள் (Fresh Route)  04-ம், புலம் பெயர்ந்த வழித்தடங்கள் (Migration Route) 25-ம்  ஆகும்.

உத்திரமேரூர் நடுநிலைப்பள்ளி முதல் அங்கம்பாக்கம் கூட்ரோடு வரையும்,  கண்டிகை கூட்ரோடு முதல் புதுப்பேட்டை கூட்ரோடு வரையும், காஞ்சிபுரம் பேருந்து நிலையம் முதல் பாலுச்செட்டிச் சத்திரம் வரையும், மற்றும் இருங்காட்டுக் கோட்டை சிப்காட் ஆர்ச் முதல் அமரம்பேடு கூட்ரோடு வரை செல்லும் புதிய பேருந்து வழித்தட மினி பேருந்தினை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து “நிறைந்தது மனம்” திட்டத்தின்கீழ் மினி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்ததாவது: 

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட மினி பேருந்து உரிமையாளர் சங்கத்தின் சார்பாக, காஞ்சிபுரம், திருப்பெரும்புதூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில், எங்கள் கனவு திட்டமான மினி பேருந்து திட்டத்தினை புதிதாக துவக்கி வைத்து, பொதுமக்கள் எளிதாக பேருந்து நிலையத்தினை சிரமம் இன்றி அடையவும், பல்வேறு கிராம பகுதிகளில் உள்ள வழித்தடங்களுக்கு  செல்லவும் 25 வருட காலத்திற்கு பிறகு அவர்களுக்கு கிடைத்த வெற்றியாகும். புதிய மினி பேருந்து திட்டத்தினை ஏற்படுத்தி கொடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் மினி பேருந்து உரிமையாளர் சங்கத்தின் சார்பில் எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம்  ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், புதிய மினி பேருந்து சங்கத்தின் உரிமையாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments