காஞ்சி தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் - பல்வேறு முக்கிய ஆலோசனைகளை வழங்கிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு க. சுந்தர் எம்.எல்.ஏ தலைமை வகிக்க, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி முன்னிலை வகித்தார்.
அவரது உரையில்,
-
2026 சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள்,
-
புதிய உறுப்பினர்கள் சேர்த்தல்,
-
இளைஞர்கள் மற்றும் மகளிர் உறுப்பினர் சேர்க்கை,
-
திராவிட மாடல் ஆட்சியின் நான்கு ஆண்டு சாதனைகள்,
-
திமுக ஆக்கப்பணிகள்,போன்ற பல முக்கிய அம்சங்களை விளக்கமாக எடுத்துரைத்தார்.
மேலும்,
-
கடந்த தேர்தல்களில் வாக்குகள் குறைந்த பகுதிகளில் வாக்குகளை அதிகரிக்கும் முயற்சிகள்,
-
அதிக வாக்குகள் பெற்ற இடங்களில் மேலும் வலிமையை உயர்த்துவது,
-
கடந்த நான்கு ஆண்டுகளில் அரசு செய்த நலத்திட்டங்களை வீடு வீடாக சென்று மக்களிடம் எடுத்துரைத்து, அதனை வாக்குகளாக மாற்ற வேண்டிய தேவை,
-
அணி ஒற்றுமையை வலுப்படுத்தி, தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை பெருவாக்கு வித்தியாசத்துடன் வெற்றி பெற செய்ய வேண்டியது,என்றெல்லாம் வலியுறுத்தினார்.
கூட்டத்தில் பங்கேற்ற முக்கிய நிர்வாகிகள்:
-
காஞ்சிபுரம் தொகுதி எம்.எல்.ஏ. வக்கீல் எழிலரசன்
-
தொகுதி மேலிட பார்வையாளர்கள் சாரதி மணிமாறன், இசை
-
மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் அப்துல் மாலிக்
-
மேயர் மகாலட்சுமி யுவராஜ்
-
மாவட்ட பொருளாளர் சன்பிராண்டு ஆறுமுகம்
-
ஒன்றிய குழுத் தலைவர் ஆர்.கே. தேவேந்திரன்
-
ஒன்றிய செயலாளர்கள் படு நெல்லி பாபு, பி.எம். குமார், ஞானசேகரன், குமணன்
-
பகுதி செயலாளர்கள் திலகர், தசரதன் வெங்கடேசன், சந்துரு
-
தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ். சுகுமார்
-
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ்
-
மாணவரணி, பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments