சிறுமி மீது பாலியல் குற்றம்: இளைஞருக்கு உதவிய உறவினருக்கு 30 ஆண்டு சிறை - காஞ்சிபுரம் நீதிமன்றம் கடுமையான தீர்ப்பு
காஞ்சிபுரம், ஜூன் 18:
பொலீசார் தரவுப்படி, 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி, அய்யப்பன் என்பவரின் மகளை, அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது இளைஞர் ஒருவர், வந்தவாசியில் உள்ள உறவினர் ராஜா என்பவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று, மானபங்கம் செய்ததாக புகார் எழுந்தது.
வழக்குகள்:
-
சிறுமியை கடத்த உதவிய வழக்கில், 10 ஆண்டு சிறை, ரூ.1,000 அபராதம் (அபராதம் செலுத்தத் தவறினால் 2 மாத கூடுதல் சிறை)
-
அடைக்கலம் அளித்து பாலியல் குற்றத்திற்கு நேரடியாக உதவிய வழக்கில், 20 ஆண்டு சிறை, ரூ.20,000 அபராதம் (அபராதம் செலுத்தத் தவறினால் 2 மாத கூடுதல் சிறை)
இதனால், ராஜாவுக்கு மொத்தம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.21,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கில், மாவட்ட அரசு வழக்குரைஞர் பா. கார்த்திகேயன் ஆஜராகி வழக்கை தாக்கல் செய்தார். குற்றவாளி இளைஞருக்கு எதிரான வழக்கு தற்போது காஞ்சிபுரம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்கின்றது.
No comments
Thank you for your comments