Breaking News

தனியார் நிதி நிறுவனத்தின் நெருக்கடியால் ஆட்டோ ஓட்டுனர் தூக்கிட்டு தற்கொலை!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் மகாத்மா காந்தி தெருவை சேர்ந்தவர் வீரராகவன் வயது 55, அவருக்கு வசந்தி என்ற மனைவியும், மோகன், தேவராஜ் என்ற மகன்களும் உள்ளனர்.


இந்த நிலையில் வீரராகவன் உத்திரமேரூரில் உள்ள எக்விடஸ் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஐந்து லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. தவணை தொகையை கொரோனா காலத்திலும் சரியான முறையில் கட்டி வந்த நிலையில் அந்தநிறுவனம் அவருக்கு மீண்டும் கூடுதலாக நான்கு லட்சம் ரூபாய் கடன் வழங்கி உள்ளது இந்தநிலையில் உடல்நலம் குறைவு காரணமாக அவரால் கடந்த மூன்று மாதங்களாக தவணைத் தொகை கட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 இந்த நிலையில் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் தொடர்ந்து அவரது வீட்டிற்கு வந்து நெருக்கடி கொடுத்து வந்ததாகவும், தகாத வார்த்தைகளால் திட்டியாதாக்கவும் கூறப்படுகிறது.

இதனால் வீரராகவன் கடந்து சில தினங்களாகவே மன உளைச்சலில் இருந்து வந்ததாக  கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை  வீரராகவன் வீட்டிற்கு வந்த அந்த நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் இன்று மாலைக்குள் கடன் தவணையை கட்டவேண்டும் என்று எச்சரித்தாக கூறப்படுகிறது. இதனால் மாநம்முடைந்த விரராகவன் தனது வீட்டின் உள்ளெ சென்று கதவை தாலிட்டுள்ளார். அவரது குடும்பத்தார் கதவை தட்டியும் அவர் திறக்காததால் உத்திரமேரூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அவர்கள் வந்து கதவை உடைத்து பார்த்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

உத்திரமேரூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அவரது மனைவி வசந்தி தனது கணவர் சாவிற்கு காரணம் அந்த தனியார் நிதி நிறுவனத்தின் நெருக்கடி தான் என்று காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து உத்திரமேரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நிதி நிறுவனம் நெருக்கடியால் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் உத்திரமேரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments

Thank you for your comments