Breaking News

முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளில் 720 பேருக்கு சிக்கன் பிரியாணி – காஞ்சிபுரத்தில் 72 நாட்கள் தொடர்ந்த அன்னதான சேவை!

 காஞ்சிபுரம் :


தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவர் ஆன மு க ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழாவினை திமுகவினர் மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கி தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எம் எஸ் சுகுமார் ஏற்பாட்டின் பேரில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழாவினை கொண்டாடும் வகையில், முக ஸ்டாலின் பிறந்த நாளான மார்ச் 1ஆம் தேதி முதல்,அவரது வயதை குறிக்கும் வகையில் 72  நாட்களுக்கு காஞ்சிபுரத்தில் நாள்தோறும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. 

நாள்தோறும் உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில் 72 வது நாளான அன்று  72 கிலோ சிக்கனுடன் பிரியாணி செய்து 720 பேருக்கு  வழங்கும் விழா நடைபெற்றது. 

விழாவில் காஞ்சிபுரம் எம்பி க. செல்வம் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.

விழாவில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார், மாவட்ட பொருளாளர் சன் பிராண்ட் கே ஆறுமுகம், மாநகர செயலாளர் சி.கே.வி தமிழ்ச்செல்வன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் யுவராஜ், ஒன்றிய செயலாளர் படுநெல்லி பி எம் பாபு மற்றும் கட்சி நிர்வாகிகளும், பல்வேறு அணிகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments