Breaking News

ரூ.70 லட்சம் மதிப்பில் புதிய கூட்டுறவு வளாகம் அமைக்க காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் அடிகள் நாட்டினார்


காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலையில் ரூ.70 லட்சம் மதிப்பில் புதிய கூட்டுறவு வளாகம் அமைக்க காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் அடிகள் நாட்டினார்.


கூட்டுறவு வளாகம் அமைக்க கேட்டுக் கொண்டதன் படி சட்டமன்ற கூட்டத்தொடரில் மானிய கோரிக்கையை காஞ்சிபுரத்தில் ரூ.70 லட்சம் மதிப்பில் புதிய கூட்டுறவு வளாகம் அமைக்கப்படும் என அமைச்சர் அறிவித்ததின் பெயரில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பழைய ரயில்வே நிலையம் அருகே உள்ள காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலையில் வளாகத்தில் ரூ.70 லட்சம் மதிப்பிலான புதிய கட்டிடத்தை இன்று காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் அவர்கள் அதிகாரிகளுடன் அடிக்கல் நாட்டில் பணியை துவக்கி வைத்தார், 

இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் ஒன்றிய குழு உறுப்பினர் மலர்க்கொடி குமார், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மண்டகசாலை இணை பதிவாளர் சிவகுமார் மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments