காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா
காஞ்சிபுரம், பிப்.23:

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை அதிமுக சார்பில் காஞ்சிபுரத்தில் இன்று கொண்டாடப்படவுள்ளது.
இவ்விழாவை முன்கூட்டியே கொண்டாடும் விதமாக 47 வது வட்ட அதிமுக சார்பில் அதன் செயலாளரும் மாநகராட்சி உறுப்பினருமான ஓரிக்கை பிரேம் குமார் ஏற்பாட்டில் கிரிக்கெட் வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் ஏழைப் பெண்களுக்கு விலையில்லா சேலைகளும் வழங்கப்பட்டன.
காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் விழாவிற்கு தலைமை வகித்தார்.அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் காஞ்சி.பன்னீர் செல்வம்,கழக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில் எம்ஜிஆர் இளைஞர் அணியின் செயலாளர் எஸ்எஸ்ஆர் சத்யா, மாவட்ட பொருளாளர் வள்ளி நாயகம், மாவட்ட மாணவரணி செயலாளர் திலக்குமார் ஆகியோர் உட்பட அக்கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments