மாற்றுத்திறனாளிகளுக்கு 6.24 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் கலெக்டர் கலைச்செல்வி மோகன்
காஞ்சிபுரம், பிப்.13:
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரா.மலர்விழி முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5.15லட்சம் மதிப்பிலான இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், முதுகுத்தண்டு வடம் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு இணைப்புச்சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் ஒன்று ரூ.1.9 லட்சம் மதிப்பிலுமாக மொத்தம் 6.24 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
கூட்டத்தில் அரசு அலுவலர்கள்,மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது காப்பாளர்களும் உடன் வந்திருந்தனர்.
No comments
Thank you for your comments