காஞ்சிபுரத்தில் பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற 3 பேர் கைது-ஒருவர் தலைமறைவு
காஞ்சிபுரம், பிப்.26:
காஞ்சிபுரம் அருகே பண்ருட்டி கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலையில் கடந்த 6 மாதமாக பணிபுரிந்து வருபவர் அருணா(22)இவர் திருச்சி மாவட்டம் சாயலூர் கிராமத்தைச் சேர்ந்தவர்.இவர் தங்கியிருக்கும் அறையிலிருந்து அருகில் உள்ள கடைக்கு முட்டை வாங்க சென்றுள்ளார்.
அப்போது 4 பேர் சேர்ந்து அருணாவை மானபங்கம் செய்ய முயன்றுள்ளனர்.இது குறித்து அருணா காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.புகாரின் பேரில் போலீஸôர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட குற்றச் செயலில் 4 பேர் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிய வந்தது.
பெண்ணை மானபங்கம் செய்ய முயன்றவர்களில் மேலும் ஒருவரான வெங்கடேசனையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments
Thank you for your comments