Breaking News

கோவை மாணவர்கள் தேசிய அளவில் வெற்றி பெற்று ஆசிய அளவிலான போட்டிகளுக்கு தேர்வு!

கோவை மாணவர்கள் மத்திய பிரதேசம்  இந்தூர் பப்ளிக் பள்ளியில் 3-ம் தேதி முதல் 5ம் தேதி வரை தேசிய அளவிலான  குவாங்கிடோ போட்டிகள் கலந்து கொண்டனர்.இதில் தமிழ்நாடு,கேரளா கர்நாடகா, உள்ளிட்ட  25 மாநிலங்களில்  700க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.



இதில் தமிழ்நாடு குவாங்கிடோ அசோசியேசன் ஆஃப் தமிழ்நாடு துணைத்தலைவரும் ஒருங்கிணைப்பாளரான டாக்டர் பிராங்கிளின் பென்னி தலைமையில் பயிற்சியாளர் அமிர்தராஜ் முன்னிலையில் கோவை மாவட்ட  சான் அகாடமி ஆஃப் மார்ஷல் ஆர்ட்ஸ்    மற்றும்  கென்ஷு கலை மற்றும் விளையாட்டு அகாடமி மாணவ மாணவியர்கள் இன்சிகா,இனியா ,பவித்ரா,உதயகிருஷ்ணன் ,மூவேந்தரன்,திலகவர்ஷன்,ரியா மெஸ்ஸி,ஹன்னா மெர்லின்,சர்வேஷ் ,தேஜு கிருஷ்ணன்,அபி நவ் ,ஆகிய மாணவர்கள் ஃபுல் கான்டக்ட் ஃபைட்டிங் ,செமி காண்டாக்ட் ஃபைட்டிங் மற்றும் குவான் ஆகிய மூன்று பிரிவுகளிலும் பங்குபெற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி 13 தங்கம், 5 வெள்ளி 3 வெண்கலம் என 21 பதக்கங்களை வென்றனர்.



தமிழகம் சார்பாக வெற்றி பெற்ற  மாணவ மாணவியர்களுக்கு  இரயில் நிலையத்தில் மாலை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்து  உற்சாக வரவேற்பு அளித்தனர்.இது குறித்து அகடாமி சார்பில் தெரிவிக்கையில் எங்களது மாணவர்கள் தேசிய அளவில் வெற்றி பெற்று ஆசிய அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறதுமேலும் சர்வதேச அளவில் வெற்றிபெற வைப்பதே எங்களது இலக்கு என்றும் கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எங்களது கிளைகளை உருவாக்கி அரசு பள்ளி மாணவர்களுக்கும் இந்த கலையை கற்றுக்கொடுக்க வேண்டும் இதற்கான போதிய வசதிகளை அரசு செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

No comments

Thank you for your comments