“நிறைந்தது மனம்” திட்டத்தின்கீழ் நலத்திட்ட உதவிகளை பெற்ற பயனாளிகள் முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்  வட்டம்,  இளையனார் வேலூர் ஊராட்சியில் நடைபெற்ற  மக்கள்  தொடர்பு  திட்ட  முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர்  திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப.,  அவர்களிடம் நலத்திட்ட உதவிகளை பெற்ற  பயனாளிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு “நிறைந்தது மனம்” திட்டத்தின்கீழ் நன்றிகளை தெரிவி த்தனர்.


காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்  வட்டம்,  இளையனார் வேலூர் ஊராட்சியில் நடைபெற்ற  மக்கள்  தொடர்பு  திட்ட  முகாமில் 114 பயனாளிகளுக்கு ரூ.1.64 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப.,  அவர்கள் வழங்கினார்கள்.

நமது மாவட்டத்தில் இயங்கி வரும் வருவாய் துறை,  ஊரக வளர்ச்சித் துறை,   மாற்றுத்திறனாளி நலத்துறை,  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை,  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தொழில்துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, கூட்டுறவுத் துறை,  சமூக நலன் மற்றும் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட துறைகளின் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் விவரங்கள் குறித்து துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர்.

இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் அனைத்தும்  இங்கு  அமைக்கப்பட்டு   உள்ள   துறை  சார்ந்த அரங்குகளில்  பொதுமக்கள்  தெரிந்து  கொள்ளும்  வகையில்  வைக்கப்பட்டுள்ளது.   மேலும் திட்டங்களின் விவரங்கள்  பற்றிய  சந்தேகம்  ஏதேனும்  இருப்பின்  துறை  சார்ந்த  அலுவலர்களிடம் கேட்டறிந்து தங்களின் வாழ்க்கை  தரத்தை  மேம்படுத்தி  கொள்ளலாம். இன்று மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நடைபெறுவதை முன்னிட்டு 03.01.2025  முதல் 07.01.2025 வரை பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டு மனைப்பட்டா, முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம், ஒருங்கிணைந்த சான்று, குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்ட்),  மகளிர் சுய உதவிக்குழு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 72 மனுக்கள் பெறப்பட்டு, மனுக்கள் உரிய முறையில் தீர்வு காணப்பட்டு, 114 தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு ரூ.164.87 (ரூபாய். ஒரு கோடியே அறுபத்து நான்கு இலட்சத்து எண்பத்தேழாயிரம் மட்டும்) மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பெறப்பட்ட மனுக்களில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மடக்கு சக்கரநாற்காலி – 01 நபருக்கும், வருவாய் துறை மூலம் வீட்டு மனைப்பட்டா–27 பயனாளிகளுக்கு, ஒருங்கிணைந்த சான்று -2 நபர்களுக்கும், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் திருமண உதவித்தொகை - 09 பயனாளிகளுக்கு, கொடிய நோயால் பாதிக்கப்பட்டவருக்கு உதவித்தொகை-01 பயனாளிக்கு, குடும்ப அட்டை -23 பயனாளிகளுக்கு, ஊரக வளர்ச்சித் துறை மூலம்  மகளிர் சுய உதவிக்குழு வங்கிக்கடன் -05 பயனாளிகளுக்கு, வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் வேளாண் இடுபொருட்கள மானியம் -05 பயனாளிகளுக்கு, தோட்டக்கலை துறை மூலம் இடுபொருட்கள் மானியம்-04 பயனாளிகளுக்கு, சுகாதாரத்துறை மூலம் ஊட்டச்சத்து தொகுப்பு-05 பயனாளிகளுக்கு,, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி (ம) மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் CWWB உறுப்பினர் சுகாதார அட்டை -10 பயனாளிகளுக்கு, PM-AJAY கறவை மாடு மானியம்-22   பயனாளிகளுக்கு என மொத்தம்  114 பயனாளிகளுக்கு  ரூ.1,64,87,000/- மதிப்பிலான  நலத்திட்ட  உதவிகளை  மாவட்ட   ஆட்சித் தலைவர் அவர்கள்  வழங்கினார்கள்.

இதனை தொடர்ந்து மக்கள்  தொடர்பு  திட்ட  முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் நலத்திட்ட உதவிகளை பெற்ற  பயனாளிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு “நிறைந்தது மனம்” திட்டத்தின்கீழ் நன்றிகளை தெரிவித்தனர்.

இம்முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், சார் ஆட்சியர் திரு.ஆஷிக் அலி, இ.ஆ.ப., இளையனார் வேலூர்  ஊராட்சி மன்றத்தலைவர் திரு.கோ.கமலக்கண்ணன், இளையனார் வேலூர்  ஊராட்சி மன்ற துணைத்தலைவர் திருமதி.ஜெ.ஜெயசுந்தரி, உள்ளாட்சி  மன்ற  பிரதிநிதிகள்  மற்றும்  அரசு  அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

இம்முகாமினை தொடர்ந்து இளையனார் வேலூர்  உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியினை மாவட்ட ஆட்சித்தலைவர்   அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, மாணவ/மாணவியர்களின் கற்றல் திறனை கேட்டறிந்து, மாணவ/மாணவியர்கள் பாராட்டி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலுள்ள சத்துணவு கூடத்தினையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு,  உணவின் தரத்தினை ஆய்வு செய்தார்கள். பின்பு ஊராட்சியில் இயங்கிவரும் அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்து, குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி, ஊராட்சியில் செயல்பட்டு வரும் நியாய விலைக்கடையினை ஆய்வு மேற்கொண்டு, பொருட்களின் இருப்பு நிலை மற்றும் தரத்தினை கேட்டறிந்தார்கள். தொடர்ந்து ஊராட்சியில் பழங்குடியினருக்கு ரூ. 76.05 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 15 குடியிருப்புகளை பார்வையிட்டு, அவளுரிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். இவ் ஆய்வின் போது சார் ஆட்சியர் திரு.ஆஷிக் அலி, இ.ஆ.ப., மற்றும்  உடனிருந்தனர்.

No comments

Thank you for your comments