கோவையில் கேஸ் டேங்கர் லாரி விபத்து அப்புறப்படுத்தும் பணி தீவிரம் பள்ளிகளுக்கு விடுமுறை!
கோவை மரக்கடை மேம்பாலம், உப்பிலிபாளையம் பகுதியில்,18 டன் எடை கொண்ட கேஸ் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் லாரியில் இருந்த டேங்கரில், கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாதுகாப்பு கருதி லாரி விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து 500 மீட்டர் அருகாமையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments