காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
காஞ்சிபுரம் :
அதிமுக காஞ்சிபுரம் மாவட்ட மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் காவலான் கேட் பகுதியில் நடைபெற்றது.
பொதுக்கூட்டத்துக்கு மாவட்ட மாணவரணியின் தலைவர் வழக்குரைஞர் திலக் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சரும்,மாவட்ட செயலாளருமான வி.சோமசுந்தரம், முன்னாள் எம்பி காஞ்சி.பன்னீர் செல்வம், முன்னாள் எம்எல்ஏ மதனந்தபுரம் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும்,எம்எல்வுமான சேவூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம்,மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.யு.சோமசுந்தரம், மாவட்ட துணைச் செயலாளர் போந்தூர் செந்தில்ராஜன் உட்பட கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.நிறைவாக வட்ட செயலாளர் வேணுகோபால் நன்றி கூறினார்.
No comments
Thank you for your comments