Breaking News

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு கோ கிளாம் விற்பனை கண்காட்சி துவக்கம்..!

கோவையில் பிரபல கோ கிளாம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பு விற்பனையை கண்காட்சியை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் துவக்கியுள்ளது.



கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார , பகுதிகளில்  ஷாப்பிங் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே  பெரும் வரவேற்பை பெற்ற ‘கோ கிளாம்’ ஷாப்பிங் கண்காட்சி கடந்த பத்து ஆண்டுகளாக  வெவ்வேறு பண்டிகை மற்றும் பல்வேறு சீசன்களில்  தமது விற்பனை கண்காட்சியை நடத்தி குறிப்பிடதக்கது.இந்நிலையில்  பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 10,11,12 ந்தேதி வரை மூன்று நாட்கள்  இந்த விற்பனை கண்காட்சி நடைபெற உள்ளது இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள், அணிகலன்கள், நகைகள்,பரிசு பொருட்கள்,வீட்டு அலங்கார பொருட்கள் என நூறுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான ஹீனா மற்றும் ராகுல் ஆகியோர் கூறியதாவது



இந்த ஆண்டு பொங்கல் சிறப்பு  விற்பனை  கண்காட்சி துவங்கப்பட்டு ள்ளதாகவும், ஷாப்பிங் செய்ய வருபவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களுக்கான அரங்குகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளதாகவும்,குறிப்பாக கண்காட்சியில், பெண்களுக்கான லேட்டஸ்ட் மாடல் ஆடைகள்,  கொல்கத்தா,லூதியானா,குஜராத், டில்லி,ஜெய்ப்பூர்,புனே என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பிரத்யேகமாக விற்பனை செய்யபடுவதாக தெரிவித்தனர்.



மேலும் ஜனவரி 12  ந்தேதி வரை  நடைபெறவுள்ள இந்த கண்காட்சியில்  கோவை,திருப்பூர்,ஈரோடு,நாமக்கல்,உதகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாடிக்கையாளர்கள் வந்து பொருட்களை ஆர்வமுடன் வாங்கி செல்வதாகவும்  தெரிவித்தனர். முன்னதாக,கோ க்ளாம் கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஹீனா மற்றும் ராகுல் தலைமையில் நடைபெற்ற  கண்காட்சி துவக்க விழாவில்,சிறப்பு விருந்தினர்களாக அனுஷா ராகவ்,டாக்டர் பிரியதர்ஷினி,திலகவதி மதன கோபால்,தர்ஷனா சந்திரகாந்த்,ரோகினி, ஆனந்த்,லயன் ஜோய்ஸ், சுக்வியா ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை  துவக்கி வைத்தனர்.

No comments

Thank you for your comments