Breaking News

புதுமைப்பெண் திட்டத்தால் பெண்கள் உயர்கல்வியில் பெரும் முன்னேற்றம் - அமைச்சர் ஆர்.காந்தி பேச்சு

காஞ்சிபுரம் :

புதுமைப்பெண் திட்டத்தால் பெண்கள் உயர்கல்வியில் பெரும் முன்னேற்றம் அடைந்திருப்பதாக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி திங்கள்கிழமை பேசினார்.

அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் புதுமைப்பெண் திட்ட விரிவாக்கத்தின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தார்.

எம்பி க.செல்வம்,எம்எல்ஏக்கள் க.சுந்தர்,எழிலரசன்,மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கல்லூரி முதல்வர் கோமதி வரவேற்று பேசினார். விழாவில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு அரசு உதவி பெறும் 53 கல்லூரிகளை சேர்ந்த 248 மாணவியர்கக்கு புதுமைப்பெண் திட்ட கல்வி உதவித் தொகையினை வழங்கி மேலும் பேசியது..

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் புதுமைப்பெண் திட்டமானது தற்போது அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவியருக்கு வழங்கப்படவுள்ளது.இத்திட்டத்தால் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல்7777 மாணவியருக்கு ரூ.1000 வீதம் மாதம் தோறும் என மொத்தம் ரூ.20.99 கோடி வழங்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 2024 முதல் தற்போது வரை தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் 8599 மாணவர்களுக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.4.30கோடி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டது.இதனால் பெண்களின் உயர் கல்வியில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று பேசினார்.

விழாவில் காஞ்சிபுரம் சார் ஆட்சியர் ஆஷிக்அலி உட்பட கல்லூரி பேராசிரியைகள், மாணவியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.



No comments

Thank you for your comments