மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மாமன்ற சாதாரணக் கூட்டம் நடைபெற்றது !
கோவை மாவட்டம் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில் மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன்,துணை ஆணையாளர் க.சிவகுமார்,மண்டல குழுத்தலைவர்கள் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் (கிழக்கு) தெய்வயானை தமிழ்மறை (மேற்கு), வே.கதிர்வேல்(வடக்கு), ர.தனலட்சுமி (தெற்கு), மீனா லோகு (மத்தியம்), நிலைக்குழுத் தலைவர்கள் பெ.மாரிசெல்வன்(பொது சுகாதாரம்),தீபா தளபதி இளங்கோ (கணக்குகள்), மாலதி நாகராஜ் (கல்வி & பூங்கா),சாந்தி முருகன் (பணிகள்), வி.பி.முபசீரா (வரிவிதிப்பு & நிதி), சோமு(நகரமைப்பு), நிலைக்குழு உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மண்டல உதவி ஆணையர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
No comments
Thank you for your comments