Breaking News

தவ்ஹீத் ஜமாஅத்தின் மனிதநேய பணி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) காஞ்சிபுரம் கிளை சார்பாக  நோயால் அவதியுற்ற ஆதரவற்ற நபர் காஞ்சி  அரசு தலைமை மருத்துவமனையில்  சேர்த்தனர்.


கடந்த 2 நாட்களாக வாந்தி மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த 40 வயது மிக்க ஆதரவற்ற நபர் ஒருவர் காஞ்சிபுரம் சர்வதீர்த்தகுளம் பகுதியி்ல் இருப்பதை TNTJ  காஞ்சிபுரம் கிளைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில்  உரிய நேரத்தில் TNTJ காஞ்சி மாவட்ட மருத்துவரணி செயலாளர் சர்புதீன் தலைமையில், TNTJ தொண்டர்கள், பசுமை புரட்சி அல்தாப் ஆகியோர் அந்நபரை மீட்டு முதலுதவி செய்து உடைகளை மாற்றி காஞ்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

இந்த மனிதநேய பணியை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

 

No comments

Thank you for your comments