Breaking News

காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது.4 கிலோ கஞ்சா பறிமுதல்

காஞ்சிபுரம், நவ.13:

காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிர்ப்பூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இருவரை மதுவிலக்குப் பிரிவு காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.


காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்குப்பிரிவு காவல் துறையினருக்கு கீழ்க்கதிர்ப்பூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் இருவர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்தது.

இத்தகவலின் பேரில் போலீஸார் அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தவர்களை விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.அவர்கள் இருவரிடமும் இருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

No comments

Thank you for your comments