Breaking News

திராவிட மாடல் யாரையும் பிரியாது, அழிக்காது, ஒன்று சேர்க்கும் - எம்.எல்.ஏ எழிலரசன் பேட்டி

காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கலைத்திருவிழாவை துவக்கி வைத்து சிறப்பாரையாற்றிய காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர்

திராவிட மாடல் யாரையும் பிரியாது, அழிக்காது, அனைவரையும் சமம், அனைவரையும் ஒன்று சேர்க்கும் என‌ காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் பேட்டி


காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் இன்று நடைபெற்றது.இந்த கலைத்திருவிழா போட்டியினை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இந்தப் போட்டியில் காஞ்சிபுரம்‌ வட்டத்தில் உள்ள 60க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 6-12ஆம் வகுப்பு  பயிலும் மாணவர்கள்  பள்ளி அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்று மாணவர்கள் வட்டார அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பர்.இதில் சுமார்  800க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பாக தினித்திறன்களை மாணவர்கள் வெளிபடுத்தினர்.

இதில் கவின்கலை, இசை,கருவி இசை, நடனம், நாடகம், மொழித்திறன் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்று.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ.எழிலரசன் கூறுகையில்,

நடிகர் விஜய் அவர்கள் பாசிச கொள்கை என்பது புரிதல் இல்லை என்பதுதான் அவர் பாயாசம் என்று கூறி இருப்பதாக நாங்கள் கருதுகிறோம், உலகளாவிய அரசியலை எதிர்க்கும் பாசிசத்தை அவர் சுலபமாக கடக்க முயற்சிக்கிறாரா, அல்லது சமம் பண்ண நினைக்கிறாரா என்கிற கேள்வி உள்ளது, 

நேற்று விஜய் மாநாட்டில் ஏராளமான இளைஞர்கள் வந்திருப்பது பிரபல நடிகர் விஜய் என்பதாலும் ஆடியோ லான்ச் போலவே கூட்டம் கூடியுள்ளது, தமிழகத்தில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் திமுக உடனாகவும் அறனாகவும் திராவிட மாடலுக்கு துணை நின்று விளங்குகிறது.

தமிழகத்தில் திராவிட மாடல் வேண்டாம் என ஒருவர் கூறினால் என்றால் யாராலும் நிற்க முடியாது என்பதுதான் வரலாறு, 

திராவிட மாடல் என்பது சமத்துவத்துக்கானது, சுயமரியாதைக்கானது, அனைவருக்குமான வாய்ப்பினை வழங்க கூடியது, மதசார்பின்மை, சமூகநீதி, சகோதரத்துவம், மதசார்பின்மை, பெண்ணுரிமை என்று சொல்லக்கூடிய அனைத்தும் இருக்கும் உயரியசொல் திராவிட மாடல் இது யாரையும் பிரிக்காது, அழிக்காது, பிரித்த ஆளுகின்ற சூழ்ச்சிக்கும் தள்ளாது, இது அனைவரையும் ஒன்று சேர்க்கும், அனைவரையும் சமம் என்று கூறும், அனைவருக்கும் வாய்ப்பினை வழங்குவது தான் திராவிடம் என்று சொல்லக்கூடியது. அந்த வகையில்  இளைஞர்கள் கூட்டம் என்றென்றும் திராவிட மாடலுக்கு திராவிட இயக்கத்திற்கு ஒத்துழைத்து அரணாக விளங்கிக் கொண்டிருக்கின்றன. 

திராவிடம் என்றால்  பகுத்தறிவு, சுயமரியாதை, மொழி உணர்வு, தன்மான உணர்வு,  சமூக நீதி, சமத்துவம், மதசார்பற்ற தன்மை, மதநல்லிணக்கம், சகோதரத்துவம், இதை அனைத்தையும் வேண்டாம் என ஒருவர் சொல்வார் ஆனால் அவர் ஏதேனும் இந்த கொள்கையை பேச முடியாது என்றால் தமிழ்நாட்டில் யாராலும் நிற்க முடியாது என்பது தான் வரலாறு.

அதை தீர்க்கமாக அரசியல் சட்டத்தின் வாயிலாக இரு மொழி கொள்கையாகட்டும், சுயமரியாதை திருமணமாகட்டும், இந்த மண்ணிற்கு தமிழ்நாடு என பெயர் இயற்றியவர்  அண்ணா,  சமத்துவமும், சமூக நீதியும் அனைவருக்கும்  வாய்ப்பினை வழங்கப்பட வேண்டும். இட ஒதுக்கீட்டு கொள்கையில் விரிவாக்கம் செய்தவர் முத்தமிழறிஞர் கலைஞர், சமூக நீதி என்பது ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கான உரிமை என்பது சொத்துரிமையை, அரசியல் உரிமையை, சமூக உரிமையை பெற்று தந்தவராக கலைஞர் விளங்குகிறார். இவை எல்லாம் இருக்காது, இருக்க முடியாது என்று ஒருவர் சொல்ல முடியுமா என திமுக மாணவர் அணி செயலாளரும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.எம்.பி. எழிலரசன் காஞ்சிபுரத்தில் பள்ளியில் கலை நிகழ்ச்சி முடிந்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

இந்நிகழ்வில் மேயர் மகாலட்சுமி யுவராஜ், ஒன்றிய குழு தலைவர் மலர்க்கொடி குமார், மாவட்ட கல்வி அலுவலர் எழில், பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments