Breaking News

சரியான நேரத்தில் பேருந்து இயக்காததால் பொதுமக்கள் பணிக்கு செல்ல கடும் அவதி

பட்டாபிராம் :

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகிலுள்ள பட்டாபிராம் பகுதியின் மக்கள், பேருந்து சேவையின் சரியான நேரத்தில் இயக்கம் இல்லாததால் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக, பட்டாபிராமில் இருந்து பூவிருந்தவல்லிக்கு செல்லும் பேருந்து, ஏற்கனவே காலை 5:00 மணிக்கு இயக்கப்பட்டு வந்தது. 


ஆனால்,  நாளடைவில் 6:00 மணிக்கு இயக்க தொடங்கின பேருந்து தற்பொழுது 6.45 மணிக்கு இயக்கப்படுவதால் காலையில் பணிக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

இந்தப் பிரச்சினையை முடிவுறச்செய்ய, மீண்டும் இந்த பேருந்தை விடியற்காலை காலை 5:30 மணிக்கே இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர். 

மேலும், பஸ் பாஸ் மற்றும் முதியோருக்கு இலவச பயண அட்டையைப் பெறுவதற்காக, பூவிருந்தவல்லி ஆவடிக்கு  செல்ல வேண்டிய நிலை காரணமாக, பயணிகள் மிகுந்த சிரமம் அனுபவிக்கிறார்கள். இதைத் தவிர்க்க, பட்டாபிராம் பஸ் டிப்போவிலேயே பஸ் பாஸ் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி மற்றும் ஆவடி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான சாமு நாசரிடம் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

No comments

Thank you for your comments