Breaking News

காவலர் பயிற்சி மைதானத்தில் எஸ். பி. சண்முகம் தலைமையில் 63 குண்டுகள் முழங்க காவலர் வீர வணக்க நாள்



காஞ்சிபுரம் மாவட்ட தற்காலிக காவலர் பயிற்சி மைதானத்தில் எஸ். பி. சண்முகம் தலைமையில் 63 குண்டுகள் முழங்க காவலர் வீர வணக்க நாள் கடைபிடிக்கப்பட்டது. 

ஆண்டுதோறும் அக்டோபர் 21 ஆம் நாள் காவலர் வீரவணக்க நாள் கடைபிடிப்பது வழக்கம்.  1959 ஆம் ஆண்டு இதே நாளில் லடாக் பகுதியில் ஹாட் ஸ்ப்ரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில் பத்து மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர். 

கடல் மட்டத்திலிருந்து 16 ஆயிரம் அடி உயரத்தில் அன்று வீர மரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை கடல் அலைகள் கண்ணுக்கு தெரியும் இவ்விடத்திலிருந்து இன்று நினைவு கூறுகிறோம். 

அவ்வகையில் காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே உள்ள தற்காலிக காவலர் பயிற்சி மைதானத்தில் எஸ்பி சண்முகம் தலைமையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நம்மை விட்டு பிரிந்த காவல் குடும்பத்தினர் 213 காவலர் நினைவாக மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

மேலும் 63 குண்டுகள்  முழங்க அனைவரும் உனது வருங்காலத்திற்கு எனது தற்காலத்தை ஈந்தேன் நாளைய உன் விடியலுக்கு இன்று மடியை தயார் என்று கூறிய அவர்களின் வார்த்தைகளுக்கு ஏற்ப அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை செய்து முடிப்போம் என்று எஸ் பி சண்முகம் உறுதிமொழி ஏற்க அனைவரும் ஏற்றனர். 

இதில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் அதிகாரிகள், ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் என  பலர் கலந்து கொண்டனர்.








No comments

Thank you for your comments