சீதாராம் யெச்சூரியின் திருவுருவ படத்திற்கு மதிமுக தலைவர் வைகோ, துரை வைகோ, மல்லை சி ஏ சத்யா உட்பட பலர் மலர் தூவி மரியாதை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளரான சீதாராம் யெச்சூரி கடந்த 12 ம் தேதி டெல்லியில் காலமானார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாபெரும் போராளித் தலைவராக பணியாற்றியவர், குறிப்பாக நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டு இருந்த போதும், மிசா கொடுமைகளை அரங்கேற்றம் செய்யப்பட்டபோதும் அதனை எதிர்த்து மாணவர் சக்தியைத் திரட்டிப் போராடிய தலைவர். தன்னலமற்ற போராளி தலைவரான சீதாராம் யெச்சூரி அவர்களின் உடல் அவரது மறைவிற்குப் பிறகு மாணவர்களின் மருத்துவ படிப்பிற்காக ஜே.என்.யு மருத்துவ கல்லூரியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இன்று (17.09.2024) சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு மதிமுக தலைவர் வைகோ, மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதேபோன்று, துணை பொதுச் செயலாளர் மல்லை சி ஏ சத்யாயும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் திரு.கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமை குழு உறுப்பினர் திரு.ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் திரு.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் திரு.கனகராஜ், தென்சென்னை மாவட்ட செயலாளர் திரு.வேல்முருகன், மறுமலர்ச்சி திமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர்கள் தென் சென்னை மேற்கு - சைதை ப.சுப்பிரமணி, வடசென்னை கிழக்கு - சு.ஜீவன், வடசென்னை மேற்கு - டி.சி.ராஜேந்திரன், செங்கல்பட்டு வடக்கு - மாவை.மகேந்திரன், செங்கல்பட்டு கிழக்கு - ஊனை பார்த்திபன், காஞ்சிபுரம் - கருணாகரன், விருதுநகர் மேற்கு - ப.வேல்முருகன், மாநில மகளிர் அணி செயலாளர் மல்லிகா தயாளன், மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜெ.சிக்கந்தர், பகுதி செயலாளர்கள் இராம.அழகேசன், மா. தாமோதரன், துரை. மணிவண்ணன், மாவட்ட துணை செயலாளர் தி.நகர் ஹரி, மாநில இலக்கிய அணி பொருளாளர் காட்வின் அஜு, மாநில ஆபத்து உதவிகள் அணி துணை செயலாளர் விக்டர், இணையதள அணி சாகுல் ஹமீது, தொண்டரணி ஜஸ்டின், வாலாஜாபாத் பேரூர் செயலாளர் சிவக்குமார், மாணவரணி ராஜேந்திரன், விக்னேஷ் உள்ளிட்ட கழக தோழர்கள் பங்கேற்றனர்.
No comments
Thank you for your comments