Breaking News

காஞ்சிபுரத்தில் அண்ணா பிறந்த தின விழா - அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை

காஞ்சிபுரம், செப்.15:

காஞ்சிபுரத்தில் முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் பிறந்த தினத்தையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினரும் ஞாயிற்றுக்கிழமை அவரது நினைவு இல்லத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.



காஞ்சிபுரத்தில் முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்த தினத்தையொட்டி அவரது நினைவு இல்லத்தில் அரசியல் கட்சியினர், திருநங்கைகள் நலச்சங்கத்தினர், பொதுமக்கள் உட்பட பலரும் அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் தலைமையில் முன்னாள் எம்பி.காஞ்சி.பன்னீர் செல்வம், முன்னாள் எம்எல்ஏ வாலாஜாபாத்.பா.கணேசன், ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.யு.சோமசுந்தரம், ஒன்றிய செயலாளர்கள் தும்பவனம்.ஜீவானந்தம்,அத்திவாக்கம் ரமேஷ் ஆகியோர் அண்ணா இல்லத்தில் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அதிமுக ஓபிஎஸ் அணியின் சார்பில் அவரது கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித் குமார் தலைமையில் இணைச் செயலாளர் காமாட்சி கான்,மாநகர செயலாளர் வேலு,அவைத்தலைவர் ரங்கநாதன், பொருளாளர் வஜ்ரவேலு ஆகியோர் அண்ணா நினைவு இல்லத்தில் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர் அண்ணா நினைவு இல்லம் அருகிலேயே பொதுமக்களுக்கு இனிப்பும்,அன்னதானமும் வழங்கினார்கள்.

மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் எஸ்.மகேஷ்,பொதுக்குழு உறுப்பினர் வி.வெங்கடேஷ்,நகர் பொருளாளர் உமா சங்கர் உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.பின்னர் திருநங்கைகள் நலச் சங்கம் சார்பில் அச்சங்கத்தின் வேலூர் மாவட்ட தலைவி ஆர்.கங்கா,காஞ்சிபுரம் மாவட்ட திருநங்கைகள் நலச்சங்க தலைவர் சர்மிளா நாயக்,ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் ராதா,தர்மபுரி மாவட்ட தலைவர் சாரதா ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

No comments

Thank you for your comments