Breaking News

பேரறிஞர் அண்ணா பிறந்த தினவிழா - அமைச்சர், ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை

காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளையொட்டி, இன்று (15.09.2024) பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு இல்லத்திலுள்ள அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில், மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்   திரு. தா.மோ. அன்பரசன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில்,  தமிழ்நாடு முழுவதும் உள்ள சிலைகள்-நினைவகங்கள் குறித்து வடிவமைக்கப்பட்ட QR CODE ஒட்டப்பட்டுள்ளதை தனது கைப்பேசியில் ஒளி வருடல் செய்து பார்வையிட்டார்கள்.


செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், தமிழ்நாடு முழுவதும் உள்ள தலைவர்களின்  நினைவு சின்னங்கள் அல்லது சிலைகளின் வரலாற்றை தெரிந்துகொள்ள தொழில்நுட்பத்தின் உதவியை பயன்படுத்தி ஸ்மார்ட் போன் மூலம் ஸ்கேன் செய்து தலைவர்களின் முழு விவரங்களை பெற, அனைத்து மாவட்டங்களிலும் தலைவர்களின் சிலைகள், மணி மண்டபங்கள், நினைவகங்கள், அரங்கங்கள், நினைவுத் தூண்கள், நினைவு சின்னங்கள் ஆகியவற்றின் அமைப்பு வீடியோவில் பார்த்து கொள்ளவும் மற்றும் அந்த இடத்தின் முழு விவரங்கள் அறிந்து கொள்ளவும் கியூ ஆர் கோடு வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும் கியூ ஆர் கோடுடன் நினைவுச் சின்னங்கள் மற்றும் சிலைகளின் 360 டிகிரி காட்சியை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. செய்தி மக்கள் தொடர்பு துறையில் நினைவகங்களின் 360 டிகிரி காட்சி புகைப்படம் இணைக்கப்பட்டு, தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

அதனை தொடர்ந்து காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 116-வது பிறந்தநாளையொட்டி, பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு இல்லத்திலுள்ள அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில், மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்   அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், தமிழ்நாடு முழுவதும் உள்ள சிலைகள் - நினைவகங்கள் குறித்து வடிவமைக்கப்பட்ட QR CODE ஒட்டப்பட்டுள்ளதை, தனது கைப்பேசியில் ஒளி வருடல் செய்து பார்வையிட்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் திருமதி.எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், தமிழ்நாடு முழுவதும் உள்ள சிலைகள்-நினைவகங்கள் குறித்து வடிவமைக்கப்பட்ட QR CODE ஒட்டப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  தனது கைப்பேசியில் ஒளி வருடல் செய்து பார்வையிட்டார்கள். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.சத்யா ஆகியோர் உடனிருந்தனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments