காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் - அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடக்கி வைத்தார்
காஞ்சிபுரம், செப்.11:
முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் விழாவிற்கு தலைமை வகித்தார்.
எம்பி க.செல்வம்,எம்எல்ஏ எழிலரசன்,மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட விளையாட்டு அலுவலர் சோ.சாந்தி வரவேற்று பேசினார்.
விழாவில் விளையாட்டுப் போட்டிகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடக்கி வைத்தார்.
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுபபோட்டிகளில் இறகுப்பந்து,கூடைப்பந்து,கால்பந்து,கபாடி,சிலம்பம் உள்ளிட்ட சில விளையாட்டுகள் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும்,மட்டைப்பந்து காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் உள்ள சங்கரா பல்கலை வளாகத்திலும் நடைபெறும்.
இணையதளத்தில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியும்.பள்ளி,கல்லூரி மாணவர்கள்,அரசு அலுவலர்கள்,மாற்றுத் திறனாளிகள் அதற்கான தகுதி சான்று வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தொடக்க விழாவின் நிறைவில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற பாராலிம்பிக் கோட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற காஞ்சிபுரம் வீராங்கனை துளசிமதிக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் சால்வை அணிவித்தும்,பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டினார்.விழாவில் மாவட்ட ஊராட்சிக்குழுவின் துணைத் தலைவர் நித்யா சுகுமார் உட்படஉள்ளாட்சிப் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments