Breaking News

அடிப்படை வசதி இல்லாத திருத்தணி முருகன் கோவில் - பக்தர்கள் கடும் அவதி

திருவள்ளூர் :

திருத்தணி முருகன் கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாகத் திகழ்கின்றது.  இக்கோயில், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி மலையில் அமைந்துள்ளது. இது முருகப் பெருமான் வள்ளியை திருமணம் செய்து கொண்ட தலமாகும். ஆண்டின் 365 நாட்களை குறிக்கும்படியாக, 365 படிகளைக் கொண்டது இந்த மலைக்கோயில். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலமாகும். முத்துச்சாமி தீட்சதராலும் பாடப்பட்ட தலம். இக்கோயிலை தணிகை முருகன் கோயில் என்றும் அழைப்பர்.

இங்கு தினதோறும் பக்தர்கள் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். குறிப்பாக  முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய், வெள்ளி மற்றும் விசேஷ காலங்களில் லட்சத்திற்கு மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

ஆனால் பக்தர்கள் வந்து செல்ல வசதியாக வாகன நிறுத்திடமும் சரியான முறையில் அமைத்துக் கொடுக்கவில்லை. அதனால், அதிக அளவில் நெரிசல் ஏற்படுகிறது.  பக்தர்களும், வாகன ஓட்டிகளும் கடும்  அவதிக்குள்ளாகின்றனர். 

அதுமட்டுமின்றி, இங்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதியான கழிப்பிட வசதிகளும், குடிநீர் வசதிகளும்   சரியான முறையில் இல்லாத காரணத்தால் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வெயில் காலங்களில்  நிழல் கூரை கூட  சரியாக அமைத்து தரதால் வெயிலில் காத்துக் கிடக்கின்ற அவலம் நிலை உள்ளது.  

விசேஷ நேரங்களில் பொதுமக்கள் குழந்தைகளுடன்  வருபவர்களுக்கு போதிய வசதி இல்லாத நிலை ஏற்படுகிறது என்றும் பக்தர் கோடிகள் தெரிவித்தனர். 

மேலும், இங்கு ஒரு நபருக்கு நூறு ரூபாய் டிக்கெட் மற்றும் ஆயிரம் இரண்டாயிரம், ஐந்தாயிரம்  என்று கூறுகிறார்கள். 

 இந்தக் கோயிலுக்கு வருபவர்கள் சிபாரிசு கடிதமும், எந்த  துறை சார்ந்த ஐடி கார்டுகளுடன்  வருகின்ற நபர்களுக்கும் எந்த  முன்னுரிமை இல்லை என்று பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறையினர் உற்றார் உறவினர்களுக்கும் உள்ளே பணிபுரியும் பணியாளர்களின் உற்றார் உறவினர்களுக்கும் நேரடியாக முருகனை சந்திக்க அழைத்துச்  சென்று தரிசனம் செய்ய அனுமதிப்பதாக பக்த கோடிகளும் பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

 இங்கு வரும் பக்த கோடிகளுக்கு வியாபாரிகளும் அதிக அளவு தொந்தரவு செய்வதாகவும் தெரிவித்து வருகின்றனர். உள்ளே பணிபுரியும் ஆட்களிடம் பணம் கொடுத்தால் முருகனை விரைவில் பார்கலாம் என்று புலம்பும் பக்தர்களும் உண்டு..  நிர்வாகம் உடனடியாக இதன் மீது ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

நிம்மதி தேடி கடவுளை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு மேலும் மன உளைச்சல்தான் மிச்சம் என்று குற்றம் சாட்டுகின்றனர். கடவுளை தரிசிக்கவும் பாகுபாடா என்ற கேள்வியையும் முன் வைத்துள்ளனர்.. 

No comments

Thank you for your comments