மக்களுடன் முதல்வர் திட்ட முகமில் கலைஞர் கனவு இல்லம் வீடு கட்டும் பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கினார் எம்எல்ஏ சுந்தர்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வாரணாசி கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது வாரணாசி ஊராட்சி மன்ற தலைவர் பிரேமா மோகன் சுந்தரம் ஏற்பாட்டில் வாரணாசியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் குண்ணவாக்கம் வாரணவாசி தேவியம்பாக்கம் வேம்பாக்கம் உள்ளிட்ட ஊராட்சி சார்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்
இந்நிகழ்ச்சியில் சிறப்பாக அழைப்பாளராக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டு கலைஞர் கனவு இல்லம் வீடு கட்டும் பயனாளிகளுக்கு பணி ஆணை மற்றும் நலத்திட்ட உதவிகள் மகளிர் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கினர்
இந்நிகழ்வின் போது வாலாஜாபாத் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஆர்கே தேவேந்திரன் துணை தலைவர் சேகர் ஒன்றிய குழு உறுப்பினர் சஞ்சய் காந்தி வாலாஜாபாத் பேரூராட்சி இளைஞரணி அமைப்பாளர் டபுள்யு இ எஸ் சுகுமாரன் ஊராட்சி மன்ற தலைவர் பிரேமா மோகனசுந்தரம் துணை தலைவர் வார்டு உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்
Post Comment
No comments
Thank you for your comments