Breaking News

செத்தும் சுகம் இல்லை.. சுதந்திரம் பெற்று விட்டோமா? - பொதுமக்கள் ஆவேசம்


திருவள்ளூர் :

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டத்திற்கு உட்பட்ட சோராஞ்சேரி ஊராட்சியில் அமைந்துள்ள அணைக்கட்டுச்சேரி கிராமத்தில் இறந்த பின்பு அடக்கம் செய்வதில் அவலம் நிலை தொடர்ந்து நீடித்து வருவதாக  பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.  

இந்நிலை தொடர்ந்து பல ஆண்டு காலமாக எங்கள் பகுதியில் இறந்தவர்களை அடக்கம் செய்ய முடியாதஅவலம் தொடர்ந்து நீடித்து வருகிறது.   இன்னும் மழைக்காலங்களில் ஆற்றில் அதிக நீர் சென்றால் எங்கள் கதி அரோகதி தான் என்று அப்பகுதி மக்கள் புலம்பி வருகின்றனர் 

தற்போது இறந்தவர் அணைக்கட்டுச் சேரி கிராமத்தைச் சார்ந்த புரட்சி பாரதம் கட்சியின் கிளை செயலாளராக பதவி வகித்து வருகிறார்.  இவருடைய  சடலத்தை தான் தற்பொழுது  எடுத்து செல்கின்றன.

இந்த பகுதி மக்கள் இதே நிலை நீடித்தால் நாங்கள் சுதந்திரம் அடைந்து விட்டோமா என்று சந்தேகம் எழுகிறது.   எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நாங்கள் இந்த நிலமையை தான் சந்தித்து வருகிறோம். 

பலமுறை இந்தப் பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்து பார்வையிட்டு சென்றபோதும் எங்களது நிலைமை இப்படியேதான் நீடித்து வருகிறது.

 மாற்று சுடுகாடு பாதியில் நிற்பதாக தகவல் தெரிவிக்கிறது.  இப்பணி தொடர்ந்து நிறைவேற்ற பணம் இல்லையாம்... 

இதற்கு தற்போது உள்ள அரசு நடவடிக்கை எடுக்குமா?  செத்தும் சுகம் இல்லை என்ற நிலை நீடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...

No comments

Thank you for your comments