Breaking News

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் பிரேமலதா விஜயகாந்த் தரிசனம்

 

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்க்கு கோயில் பிரசாதம் வழங்கிய கோயில் ஸ்தானீகர் நடராஜ சாஸ்திரிகள்

காஞ்சிபுரம்,ஆக.16:

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி தரிசனம் செய்தார்.

ஆடி மாத கடைசி வெள்ளி மற்றும் வரலட்சுமி நோன்பையொட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தார்.அவரை கோயில் நிர்வாகத்தின் சார்பில் கோயில் ஸ்தானீகர்கள் வரவேற்று அழைத்து சென்றனர். சுவாமி தரிசனத்திற்கு பிறகு ஆலய ஸ்தானீகர் நடராஜ சாஸ்திரிகள் பிரேமலதா விஜயகாந்த்க்கு பிரசாதம் வழங்கினார். 

தரிசனத்துக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது.அரசியல் கட்சிகள் அனைத்தும் பொதுக்குழு கூட்டங்களை நடத்தி வருகின்றன. தேமுதிகவும் வரவிருக்கும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறோம். 

சுதந்திர தின விழாவையொட்டி ஆளுநர் அளித்த விருந்தில் தேநீர் விருந்தில் கலந்து கொண்டு அங்கு அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்தோம்.சாதி,மதத்திற்கு அப்பாற்பட்டது தேமுதிக என்றும் பிரமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

No comments

Thank you for your comments