கூலித்தொழிலாளியின் குழந்தைகள் கல்வி பயில இரசக்கர வாகனம் - காலூர் ஊராட்சி மன்ற தலைவர் வழங்கினார்
காஞ்சிபுரம், ஆக.18:
காஞ்சிபுரம் மாவட்டம் பெரியநத்தம் பகுதியை சேர்ந்த குமார்,கனகா தம்பதியர்.இருவரும் அருகேயுள்ள தோட்டத்தில் கூலித் தொழிலாளிகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.
இருவரும் சுமார் 5 கி.மீ.தொலைவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1 மற்றும் 2 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.
மகன்கள் இருவரையும் பள்ளிக்கு மிதிவண்டியிலும் நடந்து செல்வதாலும் குறிப்பிட்ட நேரத்தில் தனது மகன்களை பள்ளிக்கு சென்று வர முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.தம்பதியரின் வறுமையை கேள்விப்பட்ட காலூர் ஊராட்சி மன்ற தலைவர் சகுந்தலா சிவசங்கர் கூலித் தொழிலாளியின் மகன்கள் இருவரும் பள்ளிக்கு குறிப்பிட்ட நேரத்தில் சென்று வர வசதியாக ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனத்தை வழங்கினார்.
இலவசமாக இருசக்கர வாகனம் வழங்கியமைக்காக ஊராட்சி மன்ற தலைவர் அக்கிராம பொதுமக்கள் பலரும் பாராட்டினார்கள்.
No comments
Thank you for your comments