காஞ்சிபுரத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
காஞ்சிபுரம், ஆக.19:
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 514 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அவற்றுக்கு உடனடியாக தீர்வு காணுமாறு ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ் முன்னிலை வகித்தார்.இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 514 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்று அவை அந்தந்த துறை சார்ந்த அரசு அலுவலர்களுக்கு பரிந்துரை வைக்கப்பட்டு உடனடியாக தீர்வு காணுமாறும் ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே பாண்டவாக்கம் கிராமத்தெருவைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைப் பெண்ணுக்கு ரூ.6840 மதிப்பிலான இலவச தையல் இயந்திரத்தையும் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரா.மலர்விழி உட்பட அரசின் பல்வேறு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments