ஆக.21 முதல் வேலூர் மாநகராட்சியில் ஊசூர் சாலை ஒரு வழி சாலையாக மாற்றம்
வேலூர் மாநகராட்சி ஊசூர் சாலையில் பாதாள சாக்கடை பணி 21.08.2024 முதல் 30.09.2024 வரை நடைபெறவுள்ளதால் ஊசூர் சாலை ஒரு வழி சாலையாக மாற்றப்பட்டுள்ளது.
வேலூர் மாநகராட்சி ஊசூர் சாலையில் பாதாள சாக்கடைப் பணிகள் வருகின்ற 21.08.2024 முதல் 30.09.2024 வரை நடைபெற உள்ளது. இந்த ஊசூர் சாலையானது இருவழி சாலையாகவும், போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியாகவும் உள்ளது. எனவே பாதாள சாக்கடை பணிகள் நடைபெற உள்ள மேற்குறிப்பிட்ட நாட்களில் ஊசூர் சாலையானது ஒரு வழி சாலையாக மாற்றம் செய்யப்பட உள்ளது.
பாதாள சாக்கடை பணி நடைபெறும் நாட்களில் வேலூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஊசூர் சாலை வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் முஸ்லிம் உயர்நிலைப் பள்ளியின் எதிர்புறம் உள்ள ஆரணி சாலை வழியாக சென்று புதிய சங்கரன் பாளையம் சாலை வழியாக ஊசூர் சாலையை சென்றடைய வேண்டும்.
வேலூர் நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் ஊசூர் சாலையின் வழியாக செல்லலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
No comments
Thank you for your comments