Breaking News

பத்திரிகையாளர்களுக்கான அரசு திட்டங்கள் பாரபட்சமின்றி அனைவருக்கும் சென்றடைய வேண்டியது அவசியம் -Dr கா.குமாரின் என் குரல்

 

பத்திரிகையாளர்கள், சமுதாயத்தின் நலனுக்காக பாடுபடுகிறவர்கள். அவர்கள் செய்தி மற்றும் தகவல்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு, மக்களின் குரலாகவும் செயல்படுகின்றனர். இவர்களின் சேவையை மதித்து, அரசு பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது.  அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.  ஆனால், அவை அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் முழுமையாக சென்றடையவில்லை என்ற புகார்களும் தொடர்ந்து எழுகின்றன. இதற்காக பெரும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

 


அரசின் திட்டங்கள் ஒருமுகமாக மட்டுமே சென்றடையுமா?

பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு மருத்துவ உதவி மற்றும் காப்பீட்டு திட்டங்கள் வழங்கப்படுகின்றன. பஸ் பாஸ், இலவச மற்றும் மானிய விலையில் வீட்டு மனை பட்டா, குடியிருப்பு திட்டங்கள் என அரசு பல்வேறு திட்டங்கள் வழங்கிவருகின்றன. 

தொழில் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் நிதி உதவிகள் மற்றும் இழப்பீடுகள் வழங்கப்படுகின்றன. சேவை மற்றும் தரமான செய்தியாளர்களுக்கு விருதுகள், மானியங்கள் மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்படுகின்றன.

எனினும், பல செய்தியாளர்கள், குறிப்பாக நகர்புறம்,  புறநகர்ப் பகுதிகளில் பணிபுரிபவர்கள், இந்த உதவிகள் அவர்களிடம் முழுமையாக சென்று சேரவில்லை என்கிறார்கள். 

அரசின் திட்டங்கள் ஒருமுகமாக மட்டுமே சென்றடையுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பு வருகின்றனர். அனைவருக்கும் அரசு திட்டங்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளனர்.

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களின் பொறுப்பு

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் (றிஸிளிs) பத்திரிகையாளர்களுக்கு இந்த அரசு திட்டங்களை வழங்குவதில் முக்கியப் பொறுப்பை வகிக்கின்றனர். 

அவர்கள் நேர்மையாக செயல்பட வேண்டும். அரசு நலத் திட்டங்களைப் பற்றிய தகவல்களை எளிதாகக் கிடைக்கச் செய்ய வேண்டும்.

அனைத்து செய்தியாளர்களுக்கும் உரிய சலுகைகள் பெற்றுத்தர வேண்டும், அவர்கள் எந்த ஊரில், எந்த மாதிரியான ஊடகத்தில் பணிபுரிகிறார்கள் என்பதில் கவனம் செலுத்தாமல். பாரபட்சமின்றி அனைவருக்கும் அரசு திட்டங்கள் எளிதில் கிடைக்க வழிவகை செய்யவேண்டும்

செய்தியாளர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்களை விரைவாகவும் தெளிவாகவும் வழங்க வேண்டும்.

வழிகாட்டுதல் மற்றும் முன்னெச்சரிக்கை

பத்திரிகையாளர்களுக்கான அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சலுகைகள் முழுமையாக சென்றடைய, சில நடவடிக்கைகள் அவசியமாகின்றன..

றிஸிளிக்கள் பத்திரிகையாளர்களுடன் நேரடி தொடர்பில் இருந்து, அவர்களின் தேவைகளை அறிந்து, தேவையான உதவிகளை ஏற்படுத்த வேண்டும்.

மாண்புமிகு செயல்முறை: அரசின் திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்பில் இருப்பவர்களுக்கு நேர்மையான பார்வை, செயல் திறன், மற்றும் பொறுப்புணர்வு இருக்க வேண்டும்.

பத்திரிகையாளர்கள் சமுதாயத்தின் முக்கிய பங்கு வகிப்பவர்கள். இவர்களின் சேவையை மதித்து, அரசு வழங்கும் நலத்திட்டங்கள் மற்றும் சலுகைகள், அவர்களுக்கு பாரபட்சமின்றி முழுமையாக சென்றடைய வேண்டும். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள், இந்த சேவையை நியாயத்தன்மையுடன், சீரியத்துடன் செயல்படுத்த வேண்டியது அவசியம் என்பதை நான் இங்கு வலியுறுத்துகின்றேன். 

சில செய்தியாளர்கள் போட்டி மனப்பான்மையுடன் பிஆர்ஓக்களிடம் பரப்பும் தவறான தகவல்களும் இதற்கு முதன்மையான காரணமாக உள்ளது என சக செய்தியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். நான் பெரிய பத்திரிகை, நீ சிறிய பத்திரிகை என மட்டுப்படுத்துவது என்ற அவமானங்களை செய்தியாளர்கள் சந்தித்து வருகின்றனர். உள்ளூர் செய்திகளை மக்களிடம் முழுமையாக சென்ற சேர்க்கும் வேலையில் சிறிய பத்திரிகைகளே முதன்மையாக உள்ளது என்பதை அரசும், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களும் உணரவேண்டும். 

சமுதாயத்தின் நலனுக்காக பாடுபடும் செய்தியாளர்களிடம் பாரபட்சமின்றி அரசு உதவி திட்டங்கள் சென்று சேர அரசும், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களும் நல் திட்டங்களை வகுத்து வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்கள் பணிக்கு உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை, பத்திரிகையாளர்கள் நலனை முதன்மையாக கொண்ட கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிட்ட நன்நாளில் தமிழக அரசுக்கு என் குரல் வாயிலாக முன் வைக்கின்றேன்... தமிழ் வெல்லும்...

No comments

Thank you for your comments