Breaking News

குடும்ப பிரச்சினையால் விபரீதம் : போலீஸ்காரர் மனைவி தற்கொலை

திருவள்ளூர் :

திருமுல்லைவாயலில் குடும்ப சண்டையில் போலீஸ்காரர் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.



ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சத்திய மூர்த்தி நகரில் உள்ள காவலர் குடியிருப்பில் வசிப்பவர் பாரி மணிகண்டன் (வயது 35) இவர் ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் 5 வயது பட்டாலியனில் போலீஸ்காரராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிரியங்கா(30) இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உண்டு.

இந்த நிலையில் கணவன் - மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இதில் மனம் உடைந்த பிரியங்கா தலைக்கு பூசும் ஹேர் டையை குடித்து விட்டார்‌. 

இதில் மயக்கமான நிலையில் இருந்த அவரை உடனடியாக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் பிரியங்கா இறந்து போனார்.

இதுபற்றி தகவலறிந்த திருமுல்லைவாயல் போலீசார் தனியார் மருத்துவ மனைக்கு சென்று பிரியங்கா சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இது பற்றி திருமுல்லைவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் காவலர் குடியிருப்பில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற  தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.

No comments

Thank you for your comments