Breaking News

கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கம்!

வேலூர், ஜூலை 29-

வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சாராயம் விற்பவர்களின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.



அதன் தொடர்ச்சியாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களின் வங்கி கணக்குகளையும் முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த மாதத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் தொடர்புடையவர்களின் 13 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.




No comments

Thank you for your comments