கோவை கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிவில் சர்வீஸ் ஆர்வலர்கள் கிளப் திறப்பு விழா
கோவை
கோவை கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிவில் சர்வீஸ் ஆர்வலர்கள் கிளப் திறப்பு விழா மற்றும் டாக்டர் பிரசாந்த் ஐபிஎஸ் க்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி செயலாளர் மற்றும் இயக்குனருமான டாக்டர் சி ஏ வாசுகி தலைமை தாங்கி பேசினார்.
விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் கல்லூரி முதல்வர் வி.சங்கீதா வரவேற்று பேசினார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் வி.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் சிவில் சர்வீஸ் ஆர்வலர்கள் கிளப்பை திறந்து வைத்து ஐபிஎஸ் அதிகாரி டாக்டர் பிரசாந்த்தை பாராட்டி விருது வழங்கி பேசினார்.
கமிஷனர் கூறுகையில், உறுதி விடாமுயற்சி கடும் உழைப்பு மூன்றும் இருந்தால் சிவில் சர்வீஸ் துறையில் வெற்றி நிச்சயம் அது மட்டுமல்ல எந்த துறையை தேர்வு செய்தாலும் வெற்றி பெற முடியும். அந்த முடிவை எடுப்பது உங்களுக்கு கையில் உள்ளது
கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரியில் சிவில் சர்வீஸ் ஆர்வலர்கள் கிளப் உங்களுக்கு சரியான பிளாட்பாரம் ஆகும் இதை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
விழாவில் கல்லூரியின் முதல்வர் வி சங்கீதா ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் பி. சுஜாதா டாக்டர் ஆர் சுமதி டாக்டர் ஆர் சரவணன் மூர்த்தி உள்பட ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments