Breaking News

பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு குழுவினர் கைது

சென்னை :


சென்னையின் இரண்டாவது பசுமை வெளி விமான நிலையமானது 13 கிராமங்களை உள்ளடக்கி பரந்தூர்  பகுதியிலே அமையப்பட இருக்கிறது. இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் கிராம சபை கூட்டங்கள் புறக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஆனாலும் கூட தமிழக அரசானது நில எடுப்பு பணிகளுக்காக நிலை எடுப்பு அலுவலகங்வகளை அமைத்து தனி மாவட்ட வருவாய் அலுவலரை நில எடுப்பு தொடர்பாக நிலத்தின் உரிமையாளர்களிடம் நில எடுப்பு சம்பந்தமாக  ஆட்சேபணைகளும் பெறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள 58 கிராமங்களில் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில் ஏகனாபுரம் கிராமத்தில் நடத்தாமல் புறக்கணித்ததால் ஏகனாபுரம் கிராம மக்கள் கடும் அதிர்ப்திகளுக்கு உள்ளாகினர். 

இதன் காரணமாக ஏகனாபுரம் கிராம மக்கள் 3/07/24 புதன்கிழமையான இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு குழுவினர் தெரிவித்திருந்தனர்.



இந்த நிலையில் இன்று ஏகனாபுரம் கிராமத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட போராட்டக் குழுவினர் அரசு பொது போக்குவரத்து பேருந்தில் பயணம் மேற்கொண்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்ல இருந்த போராட்டக் குழுவினரை ஏகனாபுரம் கிராமத்திலேயே வைத்து தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 

அற வழியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்த நிலையில் எதற்காக அங்கு செல்லும்போது கைது செய்கிறீர்கள் என கேட்டு போராட்டக்காரர்கள் போலீஸிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் போலீசாருக்கு எதிராக கண்டன முழக்கங்களையும் எழுப்பினர். இதனையெடுத்து கைது செய்யப்பட்ட 20 பேரையும் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

இருசக்கர வாகனம் தனியார் வாகனத்தில் பயணித்தால் காவல்துறையினரால் கைது நடவடிக்கைகள் மேற்கொள்வார்கள் என்பதற்காக அரசு பொது போக்குவரத்து பேருந்தில் பயணித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள இடத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட இருந்த பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு குழுவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த நிலையில் போராட்டக்காரர்களை கைது செய்வது குறித்து செய்தி சேகரித்த செய்தியாளர்களை பணியை செய்ய விடாமல் தடுத்து ஒருமையில் பேசி உங்களை வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தோமா என ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் உதயகுமார் கேலி கிண்டல் செய்து கேட்ட நிலையில் செய்தியாளர்கள் இதுகுறித்து உபயோகமான விளக்கம் கேட்ட நிலையில் செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பகுதியில் பெரும் பரபரப்பானது ஏற்பட்டது. 

செய்தியாளர்களிடம் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டிய காவல்துறை உயரதிகாரியின் அதிகார தோரணையான அலட்சியமான இத்தகைய பேச்சு போலீசார்க்கும் செய்தியாளர்களுக்கும் இடையான நட்புரவை முறிப்பதாக கருத்து எழுதுகிறது.

No comments

Thank you for your comments