கோனேரி குப்பம் பகுதியில் மின் ஏற்றத்தாழ்வுகளை சமாளிக்க 6 லட்சம் ரூபாய் செலவில் புதிய மின்மாற்றி.
- காஞ்சிபுரம் அருகே கோனேரி குப்பம் பகுதியில் மின் ஏற்றத்தாழ்வுகளை சமாளிக்க 6 லட்சம் ரூபாய் செலவில் புதிய மின்மாற்றி.
- பொதுமக்கள் பயன்பாட்டிற்கு காஞ்சிபுரம் எம்எல்ஏ சிவிஎம்பி. எழிலரசன் தொடங்கி வைத்தார்.
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோனேரிக்குப்பம் கிராம ஊராட்சியில் உள்ள செல்வ விநாயகர் நகர், புது நகர், தலையாரி தெரு மேட்டு தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் விநியோகத்தில் அவ்வப்போது ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு மின்விளக்குகள் வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்டவை பழுதடைந்து அதிக பொருட்செலவு ஏற்படுவதால் அந்தப் பகுதி மக்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் மின்சார ஏற்றத்தாழ்வுகளை சமாளிக்க புதிய மின்மாற்றி அமைத்து தர வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி எழிலரசனிடம் கோரிக்கை வைத்தனர்.
பொது மக்களின் கோரிக்கையை ஏற்று காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் புதிய மின்மாற்றி அமைத்து தர தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பரிந்துரை செய்தார்.
இதை தொடர்ந்து தமிழ் நாடு மின்சார வாரியம் சார்பில் 6 லட்சம் ரூபாய் செலவில் 100 கிலோ வாட் திறன் கொண்ட புதிய மின்மாற்றி செல்வ விநாயகர் நகர் பகுதியில் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கும் விழா இன்று நடைபெற்றது.
காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர் கொடி குமார் தலைமையில் நடைபெற்ற
புதிய மின்மாற்றி துவக்க விழாவில் காஞ்சிபுரம் எம்எல்ஏ
சி.வி.எம்.பி எழிலரசன் கலந்து கொண்டு புதிய மின்மாற்றியை இயக்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்து அங்கு கூடியிருந்த பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கோனேரி குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் சைலஜா சேகர், ஒன்றிய கவுன்சிலர் ராம் பிரசாத், தமிழ்நாடு மின்சார வாரியம் வடக்கு போட்ட செயற்பொறியாளர் பாண்டியன், உதவி செயற்பொறியாளர் ஹரிதாஸ், உதவி பொறியாளர் கமலக்கண்ணன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் மின்வாரிய ஊழியர்களும் பொதுமக்களும் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments