Breaking News

கலைஞர் கருணாநிதியால் பெயர் சூட்டப்பட்டவருக்கு நேர்ந்த கதி... நேர்மைக்கு கிடைத்த பரிசு மரணம்...

சென்னை: 

அறிவுடை நம்பி என்பவர் நகர அமைப்பு ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர் தற்போது மேட்டுப்பாளையத்தில் வசித்து வருகிறார். நேர்மையாக செயலாற்றும் அரசு அதிகாரிகளில் இவரும் ஒருவர்.. போற்றபடவேண்டியர்...

அறிவுடை நம்பி

இவர் எந்த நகராட்சியில் பணிபுரிந்தாலும் மாமுல் வாங்க மாட்டார் என்று இவருக்கு ஒரு தனிப்பெயர் உண்டு. ஆனால் நேர்மைக்கு கிடைத்த பரிசு பணி இடமாற்றம்... மிஞ்சியது அவமானம் மட்டுமே...

 மாமுல் வாங்காததால்  இவர் பல அதிகாரிகளால் பாதிக்கப்பட்டார் இவர் நல்லியாளத்தில் பணிபுரியும் பொழுது சேர்மன், கமிஷனர் போன்றவர்களுக்கு மாமுல் வாங்கி தராததால் இவர் பெயரில் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். 

இதனால் இவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.  பணி நீக்கம் செய்யப்பட்டு ஒரு ஆண்டுகள் ஆகிறது.  இவர் பல முறை  நகராட்சி துறை அமைச்சர் நேருவின் உதவியாளர்களை சந்தித்தார். 

பணி இடமாற்றம் என்றாலே பல லட்சம் வாங்கும் இவர்கள்...  பணிஇடை நீக்கம் செய்தவரிடம்  பணம் கேட்காமல் இருப்பார்களா... லஞ்சம் வாங்கி குவித்தவர்களால் கொடுக்க இயலும்.. நேர்மையாக பணியாற்றிய இவரால் கொடுக்க இயலுமா... ? 

எங்கே செல்வது ரூ.20 லட்சதுக்கு...  முடியாததால் இவரால் மீண்டும் பணியில் சேர இயலவில்லை... 

ரூ. 300 கோடிக்கு மேல்  " கமிஷன் - கலெக்‌ஷன் - கரப்ஷன்.." என  சேர்த்து வைத்திருப்பதாக பெயர் பெற்ற  அமைச்சரின் உதவியாளர் சீனிவாசன் கறாராக கூறிவிட்டார் என்ற குற்றச்சாட்டியுள்ளனர்...  இதனால் இவர் மிகுந்த மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. நேர்மைக்கு கிடைத்த பரிசு... அவமானம்...  . மன உளைச்சல்.. நிம்மதி இழப்பு... வேலை பறிப்பு...

இந்தநிலையில், ஆசிரியராக பணியாற்றும் இவரது மனைவி  வழக்கம்போல் பணிக்கு சென்று திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது.  ஜன்னல் வழியாக இவரது மனைவி பார்த்தபொழுது தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி  அடைந்து கதறி அழுததை  கண்ட சுற்றுப்பகுதியில் உள்ள மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

உடனடியாக மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் இருந்து காவலர்கள் வந்து அவரது உடலை மீட்டு மேட்டூர் மருத்துவமனையில் அனுமதித்தனர். பரிசோத்த மருத்துவர்கள் ஏற்கனவே இவர் இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர். 

இதனால், அப்பகுதி மக்கள் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை கடைநிலை ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை மனவேதனையில் இருக்கிறார்கள் 

முன்னாள் முதல்வர் டாக்டர் கருணாநிதி அவர்கள் பெயர் வைத்த அறிவுடைநம்பி அவர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் பாதுகாப்பு இல்லாமல் இப்படி தற்கொலை செய்துள்ளார் என்பது பெரும் வேதனையாக இருக்கிறது என்று நகர அமைப்பு அலுவலர்கள் தெரிவித்தனர்.

இவரது  மரணத்திற்கு காரணம் அமைச்சர் நேருவின் உதவியாளர்கள்தான் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இதுகுறித்து விசாரணை செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது  நகராட்சி மாநகராட்சிகளில் பணிபுரியும் பொறியாளர்கள் வருவாய்த்துறையினர்கள் டிபிஐ மற்றும் ஆணையர்கள் ஜாயின் டைரக்டர்கள் வேதனை தெரிவித்தனர் 

இவரிடம் விசாரணை மேற்கொண்டதில் தற்பொழுது கோடிக்கணக்கில் கொள்ளை அடித்து ஊழல்களை செய்த அதிகாரிகள் எல்லாம் நன்றாக இருக்கிறார்கள். லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் சிக்கி வழக்கில் உள்ளவர்களும் தற்போது பதவி உயர்வு பெற்று நல்ல இடத்தில் பணிபுரிகிறார்கள்.

ஆனால் இது போல் நேர்மையான அதிகாரிகளுக்கு நடந்த சோகம் நெஞ்சை  உலுக்குகிறது என்று வேதனை தெரிவித்தனர்.



இவரது மரணத்திற்கு முக்கிய காரணமே அமைச்சர் கே.என்.நேருவின் உதவியாளர்கள்தான் என்ற குற்றச்சாட்டு நகராட்சி நிர்வாகத்துறை அலவலர்களிடையே பரவலாக பேசப்படுகிறது..

பின்னணி உண்மை தகவல் என்ன..? களத்தில் நம் புலன் விசாரணை குழுவினர்...  உண்மை நிலவரம்  விரைவில்...

No comments

Thank you for your comments