காஞ்சிபுரத்தில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
காஞ்சிபுரம், ஜூன் 12:
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது.
உலக குழந்தை தொழிலாளர் தின எதிர்ப்பு தினத்தையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ் நிகழ்வுகளுக்கு தலைமை வகித்து குழந்தை தொழிலாளர்களை அகற்றுவதற்கான கையெழுத்து இயக்கம்,மனிதச்சங்கிலி இயக்கம் ஆகியனவற்றை தொடக்கி வைத்தார்.மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்களையும் வழங்கியதோடு விழிப்புணர்வு பதாகைகளையும் வெளியிட்டார்.
குழந்தை தொழிலாளர் முறை அகற்றுதலில் சிறப்பாக பணியாற்றியமைக்காக காஞ்சிபுரம் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா அமைப்புக்கு தொழிலாளர் துறை சார்பில் விருதும் வழங்கப்பட்டது.முன்னதாக கல்லூரி மாணவ,மாணவியர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.நிகழ்வுகளில் தொழிலாளர் நல உதவி ஆணையர் சுதா,மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர்,ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் நிர்வாகிகள், கல்லூரி மாணவ,மாணவியர்கள்,அரசு அலுவலர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments