காஞ்சிபுரத்தில் தரமற்ற தெருவிளக்குகள் அமைத்ததில் ரூ.5 கோடி ஊழல் - மேயர் மீது மாமன்ற உறுப்பினர்கள் புகார்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாநகராட்சியில் தரமற்ற தெருவிளக்குகள் அமைத்ததில் ரூ.5 கோடி ஊழல் நடந்திருப்பதாக மாமன்ற உறுப்பினர்கள் சிந்தன் மற்றும் சண்முகானந்தம் ஆகியோர் லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினரிடம் செவ்வாய்க்கிழமை புகார் செய்தனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் பதவி வகித்து வருகிறார்.
மாநகராட்சி முழுவதும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெருவிளக்குகளை தரமற்றதாக அமைத்ததில் ரூ.5 கோடி ஊழல் நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்புக் காவல் நிலையத்தில் மேயர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்களான எஸ்.சிந்தன் மற்றும் சண்முகானந்தம் ஆகிய இருவரும் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில் தெரிவித்திருப்பது.
காஞ்சிபுரம் மாநகராட்சி முழுவதும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் அமைக்கப்பட்டன.இத்தெரு விளக்குகள் அனைத்தும் மின்சார சிக்கனம், மின் கட்டண குறைப்பு ஆகியனவற்றை கருத்தில் கொண்டு எல்இடி விளக்குகளாக அமைக்கப்பட்டன.
இதற்காக சென்னையை சேர்ந்த இரு நிறுவனங்களுக்கு ரூ.12.5 கோடி மதிப்பில் ஒப்பந்தபம் கோரப்பட்டு பணிகள் வழங்கப்பட்டது. தெருவிளக்குகள் அமைக்க காப்பர் கேபிள்களை பயன்படுத்தாமல் விதிகளை மீறி அலுமினிய வயர்களை கொண்டு தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
எனவே தரமற்ற வகையில் தெருவிளக்குகள் அமைத்ததில் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் மற்றும் அதிகாரிகளுக்கும் சேர்ந்து மொத்தம் ரூ.5 கோடி வரை ஊழல் செய்துள்ளனர்.
இந்த ஊழல் குறித்து விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
No comments
Thank you for your comments