2023-24-ம் ஆண்டிற்கான மணிமேகலை விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு
2023-24-ம் ஆண்டிற்கான மணிமேகலை விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மாவட்ட ஆட்சித்தலைவர் .கலைச்செல்வி மோகன் தகவல்.
அரசு முதன்மை செயலர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அவர்களின் அரசாணை (நிலை) எண்.76 நாள்.15.03.2024-ன் படி, மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும், கிராம ஊராட்சி பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக்குழுக்கள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள சுய உதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் தொகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகியோர்களுக்கு மணிமேகலை விருது வழங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மணிமேகலை விருது தேர்வுக்கான (தகுதிகள் மற்றும் மதிப்பீட்டு காரணிகள் குறித்து) அரசாணை (நிலை) எண்.76 வாயிலாக நாள்.15.03.2024-ன்படி மாநில மற்றும் மாவட்ட அளவிலான சுய உதவிக்குழுக்கள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் நகர்புறங்களில் சுய உதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு தொகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகியவை விருதிற்காக தேர்வு செய்யும் செய்முறைகளுக்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் இவ்வரசாணையில் வழங்கப்பட்டுள்ளது.
எனவே 2023-24 ஆம் ஆண்டிற்கான விருதிற்கு தகுதியான மேற்கண்ட சமுதாய அமைப்புகளிடமிருந்து வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மணிமேகலை விருதுக்கான விண்ணப்பங்களை 27.06.2024-க்குள் காஞ்சிபுரம் மாவட்டம் வட்டார இயக்க மேலாண்மை அலகு அலுவலகங்கள் மூலம் மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தில் அளிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், தெரிவித்துள்ளார்கள்.
No comments
Thank you for your comments